குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை விலக்கிவிட சென்ற முதியவர் மரணம்!!!

உசிலம்பட்டி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை விலக்கிவிட சென்ற முதியவர் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கருக்கட்டான் பட்டியை சேர்ந்த பிரபுவும், பக்கத்து வீட்டை சேர்ந்த சின்னராஜூம் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டின் முன் இருசக்கர வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், பிரபுவின் தந்தை சின்னவேலு சமரசம் செய்ய முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் சின்னவேலுவை மீட்டு உசிலம்பட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version