அதிமுக தேர்தல் பிரசாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பாட்டி

அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது, வயதான பெண்மணி ஒருவர் எல்லா வாக்குகளும் இரட்டை இலைக்கே என வாக்கு சேகரித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சட்டமன்ற அதிமுக வேட்பாளர் மோகனுக்கு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அக்கூட்டத்திலிருந்து வெள்ளையம்மாள் என்ற வயதான பெண்மணி ஒருவர் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்திடம் மைக்கை வாங்கி பொதுமக்களிடம் எல்லா வாக்குகளும் அம்மாவுக்கு, எல்லா வாக்குகளும் எம்ஜிஆருக்கு, எல்லா வாக்குகளும் இரட்டை இலைக்கே என்றுக்கூறி வாக்கு சேகரித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் வாக்கு சேகரிக்க வந்த இடத்தில் வெள்ளையம்மாள் பாட்டி நன்றி சொல்ல வைத்துவிட்டார் என்று நெகிழ்ந்தார்.

Exit mobile version