கொரோனா எதிரொலி- ஒகேனக்கலுக்கு சுற்றுலா வர தடை!

ஒகேனக்கலுக்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், மசாஜ் மற்றும் பரிசல் செய்யவும் வரும் 31ம் தேதி வரை தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால், சுற்றுலா தளம் யாருமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Exit mobile version