ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளைப் பார்வையிட்ட அதிகாரிகள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளைக் கோட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு குழுவினர் மும்முரமாகச் செய்து வரும் நிலையில் கோட்டாட்சியர் முருகானந்தம், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் வாடிவாசல், காளைகள் வெளியேறும் பகுதி, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

Exit mobile version