வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

வேலூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்கு இயந்திரம் வைக்கும் அறைகள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், தேர்தல் பார்வையாளர் சுகம் காதே பண்டாரினானாத் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.

Exit mobile version