புதிய மாவட்டத்தின் துவக்க விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் உதயகுமார் ஆலோசனை

செங்கல்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் துவக்க விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனையடுத்து அதன் துவக்க விழா வரும் 29ம் தேதி செங்கல்பட்டில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை துவக்கி வைக்கவுள்ளார்.

இந்த நிலையில் விழா நடைபெறும் மைதானம் மற்றும் அரசு அலுவலகங்கள் அமையும் இடங்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பேரிடர் மேலானமைத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் தலைமையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

Exit mobile version