இந்தியன் வங்கியின் உதவி மேலாளர் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இந்தியன் வங்கியின் உதவி மேலாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வசித்து வரும் ஸ்ரீதர், கருங்காலக்குடியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் உதவி மேலாளாராகப் பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் பணியை முடித்துக் கொண்டு விடுதிக்குச் சென்றவர் மறுநாள் பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக பணியாளர்கள் அவரது விடுதிக்குச் சென்று பார்த்த போது, ஸ்ரீதர் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கியப்படி பிணமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, ஸ்ரீதரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version