மலை கிராமத்தின் அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மலைக் கிராமங்களில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் அரசு சார்பில் நடத்தப்படும் இலவச தற்காப்பு கலையை மாணவர்கள் ஆர்வமுடன் கற்றனர்.

கொடைக்கானல் மேல் மலை கிராமங்களான பூம்பாறை, கவுஞ்சி, கூக்கால், குண்டுபட்டி, போளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக பகுதி நேரமாக இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கு அளிக்கப்படவுள்ள இந்த பயிற்சியை பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். மலைக் கிராம பெண் குழந்தைகளை காக்க அரசு எடுத்த இத்தகைய முயற்சிக்கு அப்பகுதி மக்களும், மாணவிகளும் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version