அ.தி.மு.க. தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவு இருக்கும் – ஓ.பி.எஸ்!

தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவு இருக்கும் என அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளதாகவும், இனியும் அவ்வாறே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பகவத் கீதை வரிகளை மேற்கோள் காட்டி, எது நடந்ததோ… அது நன்றாகவே நடந்தது..!, எது நடக்கிறதோ… அது நன்றாகவே நடக்கிறது!, எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! என பகவத் கீதை வரிகளை குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version