மக்கள் அதிமுக பக்கம் என்பதை இரு தொகுதிகளின் வெற்றி காட்டுகிறது: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் கிடைத்துள்ள வெற்றி, மக்கள் அதிமுக பக்கம் இருப்பதை காட்டுகிறது. வரும் தேர்தல்களிலும் இந்த வெற்றி தொடரும் என்று கூறினார்.

இதேபோல், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், மக்களை முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்த ஸ்டாலினுக்கு இடைத்தேர்தலில் சரியான பாடத்தைப் கற்பித்துள்ளதாக தெரிவித்தார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலின் வெற்றி மூலம் ஜனநாயகம் வென்றிப்பதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார், திமுகவும், காங்கிரஸும் பணத்தை மட்டுமே நம்பியிருந்த நிலையில், அதிமுகவின் வெற்றி அவர்களுக்கு மரண அடியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Exit mobile version