சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 800 ஐ கடந்தது

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 800 ஐ கடந்தது!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 600 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இன்று 800 ஐ கடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கவும் சென்னை மாநகராட்சி அறிவுரை.

Exit mobile version