சொல்வதற்கு ஒன்றுமில்லை- உமாபாரதி கைவிரிப்பு

மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் பத்திரிகைகளில் பணியாற்றினார். அப்போது இந்த சம்பவங்கள் நடந்ததாக பெண் பத்திரிகையாளர்க மீ டூ பக்கத்தில் கூறியுள்ளனர்.

இதையடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் உமா பாரதி “இந்த சம்பவம் அவர் மத்திய அரசில் அங்கம் வகிக்காத போது நிகழ்ந்தது என விளக்கமளித்துள்ளார். அதேநேரம், இது அந்த பெண்ணுக்கும், அக்பருக்கும் இடையிலான விஷயம் என்பதால் , இதுதொடர்பாக அரசு சொல்வதற்கு எதுவும் இல்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version