குடிபோதையில் தகராறு செய்தது சட்டத்துறை அமைச்சரின் மகன் இல்லை- காவல்துறை விளக்கம்

நீலாங்கரை பகுதியில் மதுபோதையில் தகராறு செய்தது சட்டத்துறை அமைச்சரின் மகன் இல்லை என்று காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த 25ஆம் தேதி அதிகாலையில் நீலாங்கரை பகுதியில் குடிபோதையில் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டது திருவான்மியூர் பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பவரின் மகன் நவீன் என்று தெரிவித்துள்ளது. குடிபோதையில் வாகனத்தை ஆட்டோவில் மோதிய நவீன், போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இவருக்கும் அமைச்சர் மகனுக்கும் தொடர்பில்லை எனவும், சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version