கம்பம் அருகே அடிமைகாளக வேலை செய்த வட மாநில இளைஞர்கள் மீட்பு

தேனி மாவட்டம் கம்பம் அருகே புதுப்பட்டியில் அடிமைகாளக வேலை செய்த வட மாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து நடவடிக்கை மேற்கொண்ட சார்ஆட்சியர் வைத்தியநாதன்  உத்தரவின் பேரில் தனிபடை மூலம் மத்திய பிரதேச இளைஞர்கள் 6 பேர் மீட்கப்பட்டனர். இதனையடுத்து மீட்கப்பட்ட முகேஷ், தினேஷ், மனோஜ், சுஜஷ், ராம்விலாஸ், ரோசன் ஆகிய 6 பேரையும் மத்தியபிரதேச போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version