வடகிழக்கு மாநிலங்களில் செப். 29ம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு

வட கிழக்கு மாநிலங்களில் செப்டம்பர் 29 ம் தேதி முதல் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை மையம் தெரிவித்துள்ளது…

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வந்த கனமழையானது, செப்டம்பர் மாதம் 29ம் தேதி முதல் வடகிழக்கு மாநிலங்களான பீகார், மிசோரம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு திசை மாறவுள்ளதாக, இந்தியா வானிலை மையம் தெரிவித்துள்ளது.. மேலும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாவதால், தெலங்கானா மற்றும் தென்னிந்தியாவின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சராசரியை விட 37 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தாமதமாக பருவமழை துவங்கி உள்ளதாகவும் கூறியுள்ளது.

 

Exit mobile version