வடகிழக்கு பருவமழையை வரவேற்போம்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதை வரவேற்போம் என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழையை தொடங்கி உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை வரவேற்கும் வகையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து எடுத்துள்ள மழைநீர் சேகரிப்பு முயற்ச்சியின் விளைவாக நிலத்தடி நீரின் அளவு உயரும் என்கிற நம்பிக்கையுடன் இன்று துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழையை நாம் வரவேற்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்..

Exit mobile version