வடகிழக்கு பருவமழை தொடங்கியது

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிருப்பதாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மூலம் கூடுதலாக மழை கிடைத்துள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், தமிழகம், ஆந்திரா, கேராளா, கர்நாடக மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version