வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தொடக்கம்

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்று நின்று கிழக்குத் திசையில் இருந்து காற்றுவீசத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இதனால் அக்டோபர் 17ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

Exit mobile version