வடகிழக்கு பருவமழை: குற்றாலம், கும்பக்கரை அருவிகளில் குளிக்கத்தடை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றாலத்திற்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க 3வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதேபோல் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 37வது நாட்களாக குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version