2 நாட்களில் வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகத் தெரிவித்தார். இதனால் கடலோர மாவட்டங்களில் மிதமாக மழை பெய்யும் என்று அவர் கூறினார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலசந்திரன் குறிப்பிட்டார்.

Exit mobile version