வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 42 அதிகாரிகள் நியமனம்

வடகிழக்கு பருவமழையின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, 42 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, 42 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 11 அதிகாரிகளையும், மற்ற மாவட்டங்களுக்கு தலா ஒரு அதிகாரியையும் நியமித்துள்ள தமிழக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகம் முழுவதிலும் உள்ள நீர்நிலைகளை தூர் வாரி, மழை நீரை சேமிப்பதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version