ஸ்டாலின் கூறி வந்த மந்திரங்கள் எதுவும் பலிக்கவில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சட்டமன்ற தேர்தலிலும் முதலமைச்சர், துணை முதலமைச்சரை முன்னிறுத்தியே களம் காணுவோம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பட்டியலிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், பிழைக்குமா என எதிர்க்கட்சிகள் கூறிவந்த அதிமுக இன்று வலுவோடும், ஒற்றுமையோடும் நின்று சிறப்பான ஆட்சி புரிந்து வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version