அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாத பணிகள் விரைவில்நிரப்பப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்

முதலமைச்சரின் உறுதுணையோடு நடுநிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது, ஆசிரியர்கள் அல்லாத பணிகளான துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக் கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

Exit mobile version