கர்நாடகாவில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

கர்நாடகாவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சியில் இருந்த போது ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏக்கள் உட்பட மேலும் 2 இடங்கள் காலியாக உள்ளது. அதில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Exit mobile version