விவசாயிகளை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், விவசாயி என தம்மை கூறிக் கொள்வதில் பெருமையாக உள்ளது என்றும், விவசாயிகள் என்றால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு எரிச்சலாக வருகிறது எனவும் விமர்சித்தார்.

முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தஞ்சை மாவட்டம் ஒரு புண்ணிய பூமி என கூறினார். தஞ்சைக்கு அச்சுறுத்தலாக ஹைட்ரோ கார்பன் திட்டம் இருந்ததாகவும், மக்களின் அச்சத்தை போக்கவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Exit mobile version