2020ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு யாருக்கு? – இன்று வெளியாகிறது அறிவிப்பு!

2020 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

உலகளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஹார்வே ஜே ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேல் ஹாட்டன் ஆகிய மூவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெபடைடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக மூன்று மருத்துவர்களுக்கும் நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது. வேதியியலுக்கு 7ஆம் தேதியும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு 8ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. இதேபோல், அமைதிக்கான நோபல் பரிசு 9ம் தேதியும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 10ம் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது. அறிவிக்கப்படும் பரிசுகள் நோபல் தந்தையின் பிறந்த தினமான டிசம்பர் 10ம் தேதி வழங்கப்பட உள்ளது.

Exit mobile version