ஊழல் பற்றி பேச திமுகவுக்கு அருகதை கிடையாது – ஒ.எஸ் மணியன்

ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை என தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பருவ மழையையொட்டி ரூ.56 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைகளில் தண்ணீர் வடியும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தரைப் பாலங்கள் அகற்றப்பட்டு மேம்பால பணிகள் நடைபெற்று வருவதாகவும், வடிகால்களில் எதிர்பாராத உடைப்பு ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தேவையான மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேவையான அளவு மின்கம்பங்கள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். ஊழல் பற்றி பேச திமுகவுக்கு அணு அளவும், அருகதை கிடையாது என்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

Exit mobile version