கோடைகாலத்தில் சென்னையில் தண்ணீர் பிரச்னை இருக்காது -அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோடைகாலத்தில் சென்னையில் தண்ணீர் பிரச்னை இருக்காது என்றும், ஆந்திர முதலமைச்சரை சந்தித்து நீரை பெற நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை கண்ணகி நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சுவர்களில் பிரம்மாண்ட ஓவியங்கள் வரையும் கண்ணகி கலை மாவட்டம் ஓவிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான நிகழ்ச்சியை, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகம் முழுவதும் வண்ண ஓவியங்கள் வரைவதற்காக தொண்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், சாலைகளில் அதிகம் மழை நீர் தேங்காத பகுதியாக சென்னை மாற்றப்பட்டுள்ளதாகவும், வரும் கோடைகாலத்தில் சென்னையில் தண்ணீர் பிரச்னை இருக்காது என்றும், ஆந்திர முதலமைச்சரை சந்தித்து நீரை பெற நடவடிக்கைகள் எடுத்துள்ளதோடு, நீர் உற்பத்தி திட்டங்களையும் அதிகம் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version