திமுக ஆட்சி இருக்கிறது! தண்ணீர், மின்சாரம் இல்லை!! – விவசாயிகள் வேதனை

திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டாலும், காவிரி நீர் திறப்பு மெத்தனத்தாலும், விவசாயப் பணி செய்ய முடியாமல் தவித்து வருவதாக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து போதுமான அளவு தண்ணீர் திறக்கப்படாததாலும், கல்லணையில் இருந்து 4ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படாததாலும், கடைமடைப் பகுதிக்கு காவிரி நீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நாற்றுகளை நடவு செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், மின்சாரத்தை துண்டித்து விடுவதால் விவசாய பணி செய்ய முடியாமல் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version