"டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் இல்லை"

டெல்லியில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 6ஆம் நாளான இன்று, குடியரசு நாளில் நடந்த வன்முறை தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கு அரசு தயார் எனக் கூறியதால், அந்த சட்டத்தில் பிரச்சனை உள்ளது என நினைக்கக் கூடாது என தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் உள்ள மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு தூண்டி விடப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். புதிய வேளாண் சட்டங்களில் ஒரு குறையை கூட எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களால் கூற முடியவில்லை என்றும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். இதனிடையே, மாநிலங்களவை திங்கட்கிழமை காலை 9 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அறிவித்தார்.

 

Exit mobile version