நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா!!!

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டள்ளன. இந்நிலையில், ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால் இத்தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version