மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மேகேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை, மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதி உள்ள கடிதத்தில், மேகேதாட்டு அணை கட்ட சுற்றுச்சுழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவின் நடவடிக்கை, உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறும் செயல் என கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி உள்ளார். மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது என்றும் தமிழக அரசு மற்றும் காவிரி வடிநில மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதேயே கர்நாடக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், தமிழக அரசின் கருத்துகளை கேட்காமல் மேகேதாட்டு அணை தொடர்பான எந்த முடிவையும், மத்திய அரசு எடுக்கக் கூடாது என கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version