அதிமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது : துணை முதலமைச்சர்

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கோவிந்தபேரில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உருவப்படத்தை திறந்து வைத்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்தியாவிலேயே, தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருவதாக கூறினார்.

சிறப்பான ஆட்சியால் அதிமுக தொடர்ந்து இருமுறை ஆட்சியமைத்ததாகவும், வேறு எந்த ஒரு கட்சியும் அதிமுகவை போல் தொடர்ந்து ஆட்சிக்கு வர முடியவில்லை என்றும் துணை முதலமைச்சர் தெரிவித்தார். ஓராண்டுக்குள் பி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம் கட்டித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version