அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது- செல்லூர் ராஜு

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வாழ்வில் முன்னேறியதில்லை என்றும், அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் உள்ள செல்லூர் கண்மாயை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணியினையும், மதுரை வைகையாற்றில் 35 கிலோ மீட்டர் நீளத்துக்கு கருவேல மரங்களை அகற்றும் பணியினையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூ ராஜூ, மதுரை மண்ணின் மகளான நிர்மலா சீதாராமன், எந்த பதவியை வகித்தாலும் அதனை சிறப்பாக நிர்வகிப்பார் என்று கூறினார்.

Exit mobile version