இனி கண்ணாடி பார்த்து கார் ஓட்ட தேவையில்லை- வருகிறது சென்சார் கேமரா

பிரபல கார் தயாரிக்கும் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் நேற்றைய தினம் தமிழகத்தில் மின்சார கார்களை அறிமுகப்படுத்தியது. மேலும் பல்வேறு நுட்பங்களுடன் கார் தயாரித்து வாகனச்சந்தையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளது.

அடுத்ததாக ஹூண்டாய் நிறுவனம் அடுத்த தலைமுறைகளுக்கான கார்களை தயாரிக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் கூடிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கார்களில் பக்கவாட்டு கண்ணாடிகளுக்கு பதிலாக சென்சாருடன் கூடிய கேமரா பொருத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சைடு கண்ணாடிகளை பார்த்து வாகனம் ஓட்டும் சிரமம் இனி இருக்காது என கூறியுள்ளது.

இந்த தொழில்நுட்பம் அடுத்ததாக ஹூண்டாய் தயாரிக்கும் மூன்று மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. மேலும் இந்த கேமராக்கள் இயங்க எரிபொருள் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version