மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த முறைகேடும் செய்ய முடியாது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

கடந்த 1ம் தேதி புதிதாக பதவியேற்ற தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பழைய வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஆதரிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தவொரு முறைகேடும் செய்ய முடியாது, ஆனால் வாக்குப்பதிவு சமயங்களில் கோளாறுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்படவில்லை என்று கூறிய அவர், அதுபோன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற 1.76 லட்சம் வாக்குச் சாவடிகளில், பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு சதவீதம் மட்டுமே கோளாறு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version