தமிழகத்தில் அதிக அளவு மழைக்கான வாய்ப்பு இல்லை-வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு நிலை எதுவும் உருவாகாததால், தமிழகத்தில் அதிக அளவு மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், வெப்பசலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை எதுவும் உருவாகாத காரணத்தால் அடுத்த இரு தினங்களுக்கு அதிக அளவு மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசனாது மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Exit mobile version