நிவர் புயல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தீவிரப் புயலாக மாறியுள்ள நிவர் புயல், நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலாக மாறியுள்ள நிவர் புயல், நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 6 மணிநேரத்தில் 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் கடலூர் தென்கிழக்கு திசையில் 290 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version