இஸ்லாமியர்களின் வீடுகளுக்கு சென்று விளக்கம் அளித்த நிதின் கட்காரி

நாக்பூரில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இஸ்லாமியர்களின் வீடு, வீடாக சென்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்தார்.

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த சட்டம் தொடர்பாக மக்களிடம் உள்ள சந்தேகங்களை போக்க அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளது. அந்த வகையில், நாக்பூர் நகரத்தில் பிரசாரம் நடந்தது. இதில் பங்கேற்ற, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வீடு, வீடாக சென்று இஸ்லாமிர்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை நாட்டில் இருந்து வெளியேற்ற விரும்பினார் என்று குறிப்பிட்டார்.  தற்போது மஹாராஷ்டிராவில் அமைந்துள்ள அரசாங்கம் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறது என்றும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்தியல் ஒற்றுமை  இல்லாததால்,  அந்த கூட்டணி அரசாங்கம் நீடிப்பது கடினம் எனவும் கூறினார்.

Exit mobile version