நெடுஞ்சாலை துறை பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நிதின் கட்கரி

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இன்று தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த மத்திய அமைச்சரவையில் நெடுஞ்சாலை, நீர்வளம், கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகள் நிதின் கட்கரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 2வது மத்திய அமைச்சரவையில் நெடுஞ்சாலை, சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கான விவகாரங்கள் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 30ஆம் தேதி மத்திய அமைச்சராக பதவியேற்ற கட்கரி, இன்று நெடுஞ்சாலை துறைக்கான தனது பொறுப்புக்களை முறைப்படி ஏற்றுக்கொண்டார். முன்னதாக டெல்லியில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்திற்கு சென்ற நிதின் கட்கரிக்கு உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version