தேசிய தொழில்நுட்ப கழகத்தின் பட்டமளிப்பு விழா – மத்திய அமைச்சர் கட்கரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்

புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையினால் காரைக்காலில்  நிர்வகிக்கப்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் 6வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு படித்து முடித்த மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான வழியை மாணவர்கள் கண்டறிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version