பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு : வரும் 19-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரை, வரும் 19 ஆம் தேதி மீண்டும் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் மூன்று பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி லியாகத் அலி முன் ஆஜராகினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி 3 பேரையும் வரும் 19 ஆம் தேதிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

Exit mobile version