தொடரும் பரிசோதனை… அபிநந்தனை சந்தித்த நிர்மலா சீதாராமன்…

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி மருத்துவமனையில் சந்தித்து பேசினார். பாகிஸ்தானில் பிடிபட்டு 72 மணிநேரத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட அபிநந்தன், தாயகம் வந்தடைந்தார். இந்நிலையில், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

பதிலடி தாக்குதலின் போது பாராசூட்டில் இருந்து குதித்ததால் உடம்பில் ஏதும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதும் குறித்து, அபிநந்தனுக்கு முழு அளவில் மருத்துவ பரிசோதனையும், மனநல பரிசோதனையும் செய்யப்பட்டது. இதனிடையே அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

Exit mobile version