என் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு

பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் பேசினாலும் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நான் எழுப்பிய கேள்விகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். அனில் அம்பானியின் பெயரைகூட குறிப்பிடாதது ஏன் என்றும் கேள்வி அவர் எழுப்பினார். தனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நிர்மலா சீதாராமன் பெரும் நாடகத்தை அவையில் நிகழ்த்திவிட்டதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்

 

Exit mobile version