நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டுமென விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா சார்பில் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு நிலுவையில் இருப்பதால் நாளை 4 பேரையும் தூக்கிலிட தடை விதிக்குமாறு பவன்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Exit mobile version