ஒவ்வொரு நாளும் எனது நம்பிக்கையை இழந்து வருகிறேன்: நிர்பயாவின் தாயார் பேட்டி

ஒவ்வொரு நாளும் எனது நம்பிக்கையை இழந்து வருகிறேன் என்றும், ஆனாலும் நான் இன்னும் நீதிக்காக போராடி வருகிறேன் என நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார்.

டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட இருந்தநிலையில், அவர்களது தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது. அடுத்த உத்தரவு வரும்வரை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்பால் நிர்பயாவின் தாய் ஆஷாதேவி ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தூக்கிலிடுவதை ஒத்தி வைத்திருப்பது நமது அமைப்பின் தோல்வியையே காட்டுகிறது எனவும், ஒவ்வொரு நாளும் எனது நம்பிக்கையை இழந்து வருகிறேன் எனவும் கூறினார். ஆனாலும் ஒவ்வொரு நாளும் நிமிர்ந்து நிற்கிறேன் என தெரிவித்த அவர், குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்பட வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

Exit mobile version