தூக்கு தண்டனையை தள்ளிப்போட நிர்பயா குற்றவாளி செய்த நரி தந்திரம்

நிர்பயா குற்றவாளி வினய் சர்மா சிறை சுவரில் தன்னை தானே முட்டிக்கொண்டு தலையில் காயம் ஏற்படுத்திக் கொண்டதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் அக்சய் குமார், வினய் சர்மா, முகேஷ் குமார், பவன் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல தடைகளுக்கு பிறகு நான்கு பேருக்கும், மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, கடந்த 16ம் தேதி சிறை சுவரில் முட்டிக் கொண்டு தலையில் காயம் ஏற்படுத்திக் கொண்டதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூக்கு தண்டனையை தள்ளிப்போடவே அவர் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தலையில் காயம் அடைந்த வினய் சர்மாவுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Exit mobile version