நிர்பயா குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள், தங்களுக்கு விதிக்கபட்டுள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் தண்டனையானது, கருணை மனு, மறுசீராய்வு மனுக்களால் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தன்னுடைய வழக்கறிஞர் தன்னை தவறாக வழிநடத்தியதாகக் கூறி, அனைத்து நீதிமன்றங்களின் உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், மீதமுள்ள குற்றவாளிகள் 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். 

Exit mobile version