நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் சிறந்த பாடகர்களை தேர்வு செய்து விருது

நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்ற தலைப்பில் சிறந்த பாடகர்களை தேர்வு செய்து விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

வடபழனியில் உள்ள தனியார் வணிக மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிப்பான் பெயிண்ட் நிறுவன தலைவர் மகேஷ் ஆனந்த் கலந்து கொண்டார். பாடகர்கள் என்.எஸ்.கே ரம்யா, அஜேஷ் அசோக், காவ்யா அஜித், ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் இருந்து 16 சிறந்த பாடகர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு, வடபழனியில் உள்ள வணிக மஹாலில் பாடினர். அதில் சிறந்த 2 பாடகர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பலர் கண்டுகளித்தனர்.

Exit mobile version