குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்த 9 பேர் கைது

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு காவல்துறை ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் பெண் குழந்தைகளை பாதுகாத்தல் தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் காவல்துறை ஏடிஜிபி ரவி, புதுச்சேரி மனித உரிமை கமிட்டி தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஏடிஜிபி ரவி, குழந்தைகள் ஆபாச படங்களை இணையதளத்தில் பார்த்ததற்காக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version